வரிகள் : புகழேந்தி
...............................
புண்ணியம் செய்தவர்கள் நாங்களா இல்லை
பூமியை ஆளுகின்ற நீங்களா - என
புதிர் போட்டு கேட்கும் கேள்வி ஒன்று .. அதை
புரிந்து கொண்டால் அர்த்தம் பல உண்டு ( )
மூங்கில் சொன்னது ராம மூர்த்தியின் கை
வில்லாக வளைந்தேனென்று
பாறை சொன்னது அவன் பாதம்பட்டு
பாவையாக தெளிந்தேனென்று (2)
மண் சொன்னது திருமகளைத் தந்து
மருமகனாய் அடைந்தேனென்று (2)
இவையெல்லாம் கேட்கும் கேள்வி ஒன்று
என்ன சேவை செய்தீரென்று.. மனிதர்களே
என்ன சேவை செய்தீரென்று ( )
படகு சொன்னது அந்த பகவானை
கரை சேர்த்தது தாம் என்று
பாதுகை சொன்னது பதினான்காண்டு
அயோத்தியை ஆண்டோமென்று(2)
பறவை சொன்னது தர்ம பத்தினியை
சிறையெடுத்தது யாரென்று (2)
இவையெல்லாம் கேட்கும் கேள்வி ஒன்று
என்ன சேவை செய்தீரென்று.. மனிதர்களே
என்ன சேவை செய்தீரென்று ( )
பழங்கள் சொன்னது ராமன் பசியை ஆற்றி
பிறந்த பயனை அடைந்தோமென்று
குரங்கினங்கள் சொன்னது அசுர கோட்டையை
தூள்தூளாய் உடைத்தோமென்று (2)
அணில்கள் சொன்னது கடலில் அணையை கட்ட
மணலெடுத்து கொடுத்தோமென்று (2)
இவையெல்லாம் கேட்கும் கேள்வி ஒன்று
என்ன சேவை செய்தீரென்று.. மனிதர்களே
என்ன சேவை செய்தீரென்று ( )
3 comments:
Wonderful picture ! Thanks !!!
Thanks for your visits..brother..
Jai Jai sriram
Post a Comment