Wednesday, February 17, 2010

மானிலம் போற்றிடும் உன் சரிதை


வரிகள் : புகழேந்தி
...............................
மானிலம் போற்றிடும் உன் சரிதை - என்
மனதை விட்டகலாத புண்யகதை
மழையென பொழியுது தேனமுதை - உன்
மகிமையை பாடிடும் பூங்கவிதை
ராமா ராமா ( )

வித்தைகள் பயில்கின்ற வேளையில் மாமுனியின்
வேள்வியை காக்கவென விரைந்தாய் ராமா (2)
தாடகை வதம் செய்து அகலிகைக்கருள் புரிந்து
சிவனார் வில்லொடித்து சீதையின் சுயம்வரம்
புரிந்தவனே ராமா ராமா ( )

மணிமுடி சூட்டிட பெற்றவர் நினைத்தால்
மரவுரி தரித்திட சிற்றன்னை பணித்தார் (2)
மாதவம் உரிதென்று நீ வரித்தாய்.
பரதனை குறைகேட்டு பாதுகை அளித்து
பாரினை காத்தாய் ராமா ராமா ( )

மானாய் உருக்கொண்ட மாரீசனை கொன்று
வானர வீரர் தம்மை சோதரர் எனக்கொண்டு (2)
சேனையின் அணை கண்டு சீதையின் நிலைகண்டு
ராவணன் உயிர் கொண்ட ரவிகுலசோம அயோத்தியை
ஆண்ட ஸ்ரீ ராமா ராமா ( )

No comments: