Wednesday, February 17, 2010

என் பாடல் இதுவைய்ய ராமா..


வரிகள் : புகழேந்தி
...............................
என் பாடல் இதுவைய்ய ராமா - இதில்
எதுகையும் மோனையும் எதிர்பார்க்கலாமா
இதய தளத்திலே எழுந்த ஆசையில் (2)
இசைப்பதெல்லாம் சங்கீதமாகுமா (என் பாடல்)

கம்பன் எழுதிய கவிதை இதல்ல
ஸ்ரீ தியாகராயரின் கீர்த்தனை அல்ல
இயற்கை யாவும் என்னுள் இயங்கி
உயிராய் பிறந்து உருவாய் வளர்ந்த (என் பாடல்)

காரண காரியம் தெரியாதையா - புது
கவிதைகள் பண்புகள் புரியாதையா
சுருதிலய மேளங்கள் அறியேனைய்யா - உன்
சுந்தர நாமத்தின் நாதத்தில் தோன்றும் (என் பாடல்)

விழிகள் மூடி காணும் காட்சிகள்
மொழியில்லாமல் மொழியும் ஒசைகள்
தவழும் மழலை குழந்தையை போல
தாய் உன் மடியில் தளிராய் கிடக்கும் (என் பாடல்)

No comments: