Sunday, April 4, 2010

ராமா ராமா ராமா என்று நாமம்..


ராமா ராமா ராமா என்று நாமம் சொல்லி பாடனும்
நாமம் சொல்லி பாடனும்- நாவிலே
வராது போனால் நல்லவரோடு சேரனும்.

எண்ணி எண்ணி பார்க்கனும்
ஏகாந்தமாய் இருக்கனும் (2)
என்றும் அவன் ஸ்வரூபத்தில் ஈடுபட்டிருக்கனும்.

விட்டல், விட்டல், விட்டல் என்று கையைத் தட்டி பாடனும்
கையைத் தட்டி பாடனும்- கையை
தட்ட வராவிட்டால் கூட்டத்தோடு சேரனும்

எண்ணி எண்ணி பார்க்கனும்
ஏகாந்தமாய் இருக்கனும் (2)
என்றும் அவன் ஸ்வரூபத்தில் ஈடுபட்டிருக்கனும்.

கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா என்று பஜனை செய்து பாடனும்
பஜனை செய்து பாடனும் - பஜனை
செய்ய வராவிட்டால் பக்தரோடு சேரனும்.

எண்ணி எண்ணி பார்க்கனும்
ஏகாந்தமாய் இருக்கனும் (2)
என்றும் அவன் ஸ்வரூபத்தில் ஈடுபட்டிருக்கனும். (ராமா)

No comments: