
வரிகள் : புகழேந்தி
...............................
இமை மூடி வைத்தேன்..கண்ணில்
இருக்கும் நீ எங்கு போவாய்..
சுமை எனக்கில்லை சுவை அதில் உண்டு
சுந்தர நாமா ஸ்ரீ ராமா (இமை மூடி)
மனம் மனம் எனும் மாளிகையில் நீ
மன்னவனாக கொலுவிருப்பாய்
வனம் வனம் என அழைந்தது போதும்
வைதேகியுடன் வாழ்ந்திருப்பாய்
அங்கு இங்கு போவதென்றால் (2)
என் அனுமதி பெறவேண்டுமே..ராமா ராமா((இமை மூடி)
கடல் கடல் அது உன் உடல் நீலம்
கண்ணில் அதனை தேக்கி வைத்தேன்
உடல் உடல் எனும் உருவுக்குள்ளே
உனை உயிராய் உணர்வாய் ஆக்கிவைத்தேன்
என் செயலைக் கண்டு சிரிப்பாயோ (2)
நீ சிறைக் கைதி அல்லவோ..ராமா ராமா((இமை மூடி)